
easytocookஎளிதான முறையில் சமைத்து ருசித்து ரசித்து சாப்பிட. . . . . .
Easy To Cook
மட்டன் குழம்பு வகைகள்
மட்டன் குழம்பு 1

செய்முறை
மட்டனை கழுவி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்த்தூள், வினிக்கர் என்பன சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி என்பவற்றை வெட்டிவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் கடுகைப்போட வேண்டும். கடுகு வெடித்ததும் சீரகத்தைப் போட்டு பின் வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்க வேண்டும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை என்பவற்றை அதனுடன் போட்டு வதக்க வேண்டும்.
வதங்கியதும் மட்டனை போட்டு நன்கு பிரட்டி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக வைக்க வேண்டும். பிறகு கறிமசாலாத்தூள் போட்டு நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வேகவிடவேண்டும். மட்டன் நன்கு வெந்ததும் இறக்க வேண்டும். இறக்கியதும் பின் பரிமறலாம்.
தேவையானவை
ஆட்டிறச்சி – 1kg
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – தேவையான அளவு
சீரகம் – தேவையான அளவு
தக்காளி – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 1
தேசிக்காய் – பாதி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்த்தூள் – 1மேசைக்கரண்டி
கறித்தூள் – 3மேசைக்கரண்டி
வினிக்கர்– 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
மட்டன் குழம்பு 2
செய்முறை:
முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!

தேவையான பொருட்கள்:
மட்டன் – 3/4 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பட்டை – 2
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
கசகசா – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 10
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செட்டி நாடு மட்டன் குழம்பு 3
செய்முறை
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
வெங்காயம், பொண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். மிதமான சூட்டில் அடுப்பை வைக்கவும்.
ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
தேவையான பொருட்கள்
-
மட்டன் – 1 /2 கிலோ
-
சின்ன வெங்காயம் – 20
-
தக்காளி – 2
-
பூண்டு – 10 பல்
-
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
-
தேங்காய் துருவியது – 2 – 3 மேசைக்கரண்டி
-
கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 6
-
மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது)
-
மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் ( புதிதாக அரைக்க)
-
தனியா – 2 மேசைக்கரண்டி
-
வரமிளகாய் – 8
-
சோம்பு – 1 தேக்கரண்டி
-
சீரகம் – 1 தேக்கரண்டி
-
பட்டை – சிறு துண்டு
-
ஏலக்காய் – 2
-
கிராம்பு – 2
எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காய் விழுது
தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிக்க
-
பட்டை – 1 /2 ” – 2
-
ஏலக்காய் – 2
-
கிராம்பு – 2
-
பிரியாணி இலை – சிறிது
-
கருவேப்பிலை – சிறிது
-
சோம்பு – 1 தேக்கரண்டி
