top of page

சிக்கன் குழம்பு

நாட்டு கோழி குழம்பு easytocook .com

செய்முறை:
 

கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமா னால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ள லாம். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். தக்காளியை 8 ஆக நறுக்கவும்.

 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும்,ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை+ கிராம்பையும் போடவும். சிவந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு,அதில் தட்டிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கோழிக்கறி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

 

கறி நன்கு வதங்கி நீர் விட்டு வரும். இதனை 5 -10 நிமிடம் வதங்கியதும் கறி நன்கு வெந்துவிடும், அதில் அரைத்த மிளகாய் +தேங்காயை போட்டு வதக்கி, கறி முழுகும் அளவு நீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.

 

கிராமத்துக் கோழிக் குழம்பு மிளகாய் பொடியில் செய்யாததால், தனியான, மணம், சுவையுடன், சூப்பராக இருக்கும். வாசனையே உங்களை வா, வா, என்று அழைக்கும்..! இதனை இட்லி, தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி மற்றும் பராத்தாவுக்கு துணையாக சாப்பிட்டால் டக்கராக இருக்கும்.

தேவையானவை:

 

கோழிக்கறி..............................1 /2 கிலோ
பெல்லாரி...................................4
பச்சை மிளகாய்.......................4 
தக்காளி.......................................4
சிவப்பு மிளகாய்.....................10
மல்லி..........................................25 கிராம்/கைப்பிடி
மஞ்சள் பொடி.........................கொஞ்சம்
மிளகு .........................................1 தேக்கரண்டி
சீரகம்...........................................1 தேக்கரண்டி
சோம்பு......................................1 /2 தேக்கரண்டி
கசகசா.........................................1 தேக்கரண்டி
இஞ்சி.......................................... 1 இன்ச் நீளம்
பூண்டு.........................................10 பல்
தேங்காய்................................ 1 /2 மூடி
ஏலம்............................................1
பட்டை........................................ சிறு துண்டு
கிராம்பு........................................5
எண்ணெய்.................................3 தேக்கரண்டி
கறிவேப்பிலை..........................1 கொத்து
உப்பு.........................................தேவையான அளவு

Anchor 1
தேங்காய் சிக்கன் குழம்பு

செய்முறை:

கடாயில் மல்லி விதை, மிளகு, சிவப்பு மிளகாய், சீரகம், பெருஞ்சீரகம், ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனிவே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

 

அடுத்து  துருவி வைத்துள்ள தேங்காயை கடாயில் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் வறுத்து வைத்த பொருட்களுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து மிக்ஸியில்  போட்டு நைஸாக அரைக்கவும்.

 

கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.  பொன்னிறமாக வதக்கியதுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதனுடன் கலந்து கிளறி விடவும்.

 

பின்னர் சிக்கனுடன்  சிறிதளவு உப்பு,  மிளகாய்தூள் சேர்த்து பிசைந்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பத்து நிமிடங்களுக்கு கிளறிவிடவும்.

 

கிளறியதும் தக்காளி மற்றும்  தேவையான அளவு உப்பு  சேர்த்து கிளறி போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கறிவேப்பிலை போட்டு சிக்கனை மூடி வைத்து வேகவிடவும். சிக்கன்  வெந்ததும் இறக்கி பறிமாறலாம்.  

தேவையானவை:

 

சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)
பெரிய வெங்காயம்-5 நறுக்கியது
தக்காளி-2 நறுக்கியது
உப்பு தேவையான அளவு

மசாலா செய்ய:

மிளகு-1டீஸ்பூன்
பெருஞ்சீரகம் விதைகள்-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்-5-6
காய்ந்த தேங்காய்-1/4 கப்
இஞ்சி- சிறிதளவு
பூண்டு-7

bottom of page