top of page

சிக்கன் சுக்கா வறுவல்

சிக்கன் சுக்கா

தேவையான பொருட்கள்:

 

  1. சிக்கன் – 1 கிலோ ,

  2. பெரிய வெங்காயம் – 3,

  3. இஞ்சி பூண்டு விழுது -3 டீஸ்பூன்,

  4. பச்சை மிளகாய் – 3 ,

  5. கறிமாசால் தூள் – அரைடீஸ்பூன்,

  6. மஞ்சள் தூள் – அரைஸ்பூன்,

  7. மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்,

  8. மிளகுத்தூள் -1 டீஸ்பூன்,

  9. சீரகத்தூள் – 1 டீஸ்பூன்,

  10. மல்லித்தூள் – 3 டீஸ்பூன்,

  11. எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,

  12. உப்பு – தேவைக்கு,

  13. கொத்தமல்லி இலை,

  14. கருவேப்பிலை,

செய்முறை :

 

முதலில் கோழிக்கறியை சுத்தம் செய்து இப்படி சிறிய துண்டுகளாக வெட்டிபோட்டு  கழுவி  நீர்  வடிகட்டிக் கொள்ளவும்.

பிறகு கோழிக்கறி, உப்பு, மஞ்சள்தூள் ஆகியவற்றை நன்றாகக் கல‌ந்து அரை மணி நேரம் ஊற‌ வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிய‌ எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வதக்கிய பின் இஞ்சி, பூண்டு, கறி மசாலா சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு வதக்கியவுடன்  கோழிக்கறி சேர்த்து பிரட்டவும், தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மீடியம் தீயில் 20 நிமிடம் வேக விடவும்.இடையில் பிரட்டி விடவும்.

நன்றாக சுண்டி கோழிக்கறி வெந்து வந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவவும்.

சுவையான சூப்பர் சிக்கன் சுக்கா ரெடி. சாதம் வகைகளுக்கும், சப்பாத்தியுடனும் தொட்டு சாப்பிடலாம்.

  • Facebook - Black Circle
  • Twitter - Black Circle
  • Google+ - Black Circle
  • YouTube - Black Circle
  • Pinterest - Black Circle
செட்டிநாடு கோழி வறுவல்
செட்டிநாடு கோழி வறுவல்

தேவையான பொருட்கள்:

 

கோழி – 1
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 4
உலர்ந்த மிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொரிப்பதற்கு

 

 

செய்முறை:

 

முழுக்கோழியை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள் உண்டாக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையினை இறைச்சியின் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பிலையில் புரட்டி சுமார் 2 மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிட வேண்டும்.

 

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேக வைக்க வேண்டும். பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிட வேண்டும். அவ்வப்போது திறந்து இறைச்சியைத் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலாவினையும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து வேகவிட வேண்டும். கறி பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாற வேண்டும்.

செட்டிநாடு கோழி வறுவல்

bottom of page