
easytocookஎளிதான முறையில் சமைத்து ருசித்து ரசித்து சாப்பிட. . . . . .
Easy To Cook
செய்முறை:
முதலில் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் சிக்கனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட், புதினா மற்றும் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி, ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு 2 கப் தேங்காய் பாலுடன், 4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு பாசுமதி அரிசியை நீன்கு கழுவி, தேங்காய் பாலில் போட்டு, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு சிக்கனின் நிறம் மாறும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் தக்காளி, தயிர், மிளகாய் தூள் மற்றும் மீதமுள்ள மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். பின் குக்கரை சிறிது நேரம் மூடி வைத்து, தீயை குறைத்து, 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். அடுத்து குக்கரில் அரிசி ஊற வைத்துள்ள தேங்காய் பாலை வடிகட்டி ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை அதிகரித்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை சேர்த்து, நீரானது ஓரளவு வற்ற ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, குக்கரை மூடி, 10 நிமிடம் கழித்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் முந்திரியைத் தூவினால், செட்டிநாடு சிக்கன் பிரியாணி ரெடி!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 3/4 கிலோ
பாசுமதி அரிசி - 4 கப்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1/4 கட்டு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
தேங்காய் பால் - 2 கப்
வறுத்த முந்திரி - 20
தண்ணீர் - 4 கப்
பிரியாணி இலை - 2
எண்ணெய் - 5-6 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
பச்சை மிளகாய் - 10
இஞ்சி - 2 இன்ச் துண்டு (நறுக்கியது)
பூண்டு - 8 பற்கள்
பட்டை - 2 இன்ச்
ஏலக்காய் - 3
கிராம்பு - 6
தண்ணீர் - 1 டீஸ்பூன்
செட்டிநாடு சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
செய்முறை:
அரிசியைக் கழுவி ஊறவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள்.
முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, கால் டீஸ்பூன் உப்பு, அரைத்த மசாலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு துளி சேர்த்து அடித்து வையுங்கள். பிறகு, அடித்த முட்டையை குழிப்பணியார சட்டியில் பணியாரம் போல் சுட்டெடுங்கள் அல்லது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை விட்டு, இட்லி போல் வேகவிடுங்கள். ஆறிய பிறகு சிறிய துண்டுகளாக வெட்டுங்கள்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, வெங்காயம் போட்டு வதக்கி, அரைத்த மசாலா, தக்காளி, தயிர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுருள சுருள வதக்கி எண்ணெய் கக்கி வரும் போது, ஒரு கப் வென்னீர் விட்டு தளதளப்பாக இருக்கும் போது முட்டையை போட்டு கிளறி கொதிக்கவிடுங்கள். இன்னொரு அடுப்பில்,
ஒரு பாத்திரத்தில் வென்னீர் வைத்து, ஊறவைத்த அரிசியை உப்பு போட்டு, அரைப்பதமாக வேகவிட்டு வடித்து, கொதிக்கும் கலவையில் போட்டு கிளறி முன்பு சொன்ன முறையில் ‘தம்’ போடுங்கள்.
தேவையானவை:
பாசுமதி அரிசி - அரை கிலோ,
முட்டை - 10, தக்காளி - 4,
பெரிய வெங்காயம் - 3,
கடைந்த தயிர் - 1 கப்,
எண்ணெய் - அரை கப்,
நெய் - கால் கப்,
உப்பு - 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி + பூண்டு விழுது - 4 டீஸ்பூன்.
அரைக்க:
பட்டை - 2,
லவங்கம் - 2,
ஏலக்காய் - 6,
பச்சை மிளகாய் - 5,
புதினா - ஒரு கைப்பிடி,
மல்லித்தழை - ஒரு கைப்பிடி.
