top of page

Sea Food

சாளை மீன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்;

 

  1. சாளை (மத்தி) மீன் - அரைகிலோ,

  2. சிறிய வெங்காயம்,

  3. தக்காளி - 1 அரைத்து கொள்ளவும் ,

  4. மிளகாய்த்தூள் - 1 -2 டீஸ்பூன்,

  5. மிளகுத்தூள் - அரைஸ்பூன்,

  6. சீரகத்தூள் -அரைஸ்பூன்,

  7. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1டீஸ்பூன் ,

  8. கடலை மாவு - 1டேபிள்ஸ்பூன்,

  9. உப்பு - தேவைக்கு.

செய்முறை

 

இவை அனைத்து சேர்த்து மீனுடன் வைக்கவும்.கடலை மாவு சேர்ப்பதால் மீனுடன் மசாலா சேர்ந்து மீனும் பொரிக்கும் பொழுது உடையாது.

 

மசாலா மீன் வயிறு மற்றும் எல்லா இடமும் படுமாறு கலந்து வைக்கவும்.


கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ,கருவேப்பிலை இரண்டு இணுக்கு போடவும்,வெடித்ததும் மசாலா கலந்து வைத்த மீனை போடவும்.


சிவந்ததும் பிரட்டி ,இருபுறமும் சிவந்து மசாலாவும் வெந்து ரோஸ்ட் ஆனவுன் எடுக்கவும்.

சுவையான சாளை மீன் ரோஸ்ட் ரெடி.


பின் குறிப்பு : மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் தவிர குழம்பில் எதுவும் சேர்க்கலை,ஆனாலும் இந்த மீனின் ருசியில் குழம்பு அபாரமாக இருக்கும்.குழம்பு கெட்டித்தன்மை பிடித்த மாதிரி வைத்துக்கொள்ளவும்.இஞ்சி பூண்டை நறுக்கி தான் போடவேண்டும்.தேங்காயும் சேர்க்க தேவையில்லை,விரும்பினால் சேர்க்கலாம்.இது இங்கு மிகவும் விலை குறைவாக ஈசியாகக் கிடைக்கக்கூடிய மீன் (dhs 2.50/kg).வாயு தொந்திரவு உள்ளவர்கள் அளவாக சாப்பிடவும்.

  • Facebook - Black Circle
  • Twitter - Black Circle
  • Google+ - Black Circle
  • YouTube - Black Circle
  • Pinterest - Black Circle
நண்டு கிரேவி
நண்டு கிரேவி

 


செய்முறை


1. நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ளவும்.

2. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பாதி சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

5. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

7. பிறகு இதனுடன் பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.

8. பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

9. இதனுடன் கரம் மசாலா, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் நண்டை சேர்த்து லேசாக பிறட்டி, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும்.

10. பிறகு தேங்காயை நன்றாக அரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

11. நண்டு நன்றாக வெந்து குழம்பு நன்றாக கொதித்து சிறிது கெட்டியானதும், மிளகுத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு
1. நண்டை ஓடு நீக்கி கழுவியதும் சிறிது நேரத்தில் சமைத்து விடவும். இல்லையென்றால் நண்டு உள்ளே குழைந்து விடும்.

2. இஞ்சி பூண்டு விழுதில் இஞ்சி அதிகமாகவும், பூண்டு குறைவாகவும் சேர்த்து அரைக்கவும்.

3. தேங்காய் விழுதுக்கு பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும்.

4. நண்டு சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகும்.

தேவையான பொருட்கள்


நண்டு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 5
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 கோப்பை
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

Success! Message received.

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey YouTube Icon
  • Grey Pinterest Icon
  • Grey Instagram Icon
நெத்திலிக் கருவாடு வறுவல்
நெத்திலிக் கருவாடு வறுவல்

தேவையானவை :

 

வெங்காயம் – 2

தக்காளி – 1

பச்சைமிளகாய் -1

சாம்பார் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

உப்பு – சிறிதளவு

நெத்திலி கருவாடு -200 கிராம்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

 

ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். பின்பு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

 

அதன் பிறகு கருவாட்டையும் போட்டு வதக்கி விட்டு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும். கருவாடு வெந்ததும் இறக்க வேண்டும்.

 

Success! Message received.

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey YouTube Icon
  • Grey Pinterest Icon
  • Grey Instagram Icon
விறால் மீன் வறுவல்
விறால் மீன் வறுவல்

இது ஆறு,குளம்,கண்மாய்  உள்ள பகுதிகளில் கிடைக்கும்.துடிக்க துடிக்க ஃப்ரெஷாக வாங்கி சமைத்து சாப்பிடனும்.அப்பதான் ருசியாக இருக்கும்.

 

செய்முறை:

 

மீனை நன்கு உரைத்து கழுவி கட் செய்து கொள்ளவும்.உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி எடுக்கவும். அரைகிலோ மீனுடன் ஒரு டீஸ்பூன் குவியலாக மிளகாய்த்தூள்,கால்- அரைடீஸ்பூன் மிளகுத்தூள்,கால் டீஸ்பூன்- மஞ்சள் சீரகத்தூள்,பூண்டு தட்டியது 5 பல் ,தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

 

எல்லாதூண்டுகளிலும் படுவது போல் கலந்து பிசறி ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு சாலோ ஃப்ரை பேனில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனைப்போடவும். திருப்பி போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.சுவையான பொரிச்ச மீன் ரெடி.

தேவையானவை:

மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

மஞ்சள் - தேவைக்கு

சீரகத்தூள் - தேவைக்கு

பூண்டு - தட்டியது 5 பல் ,

உப்பு - தேவைக்கு சேர்க்கவும்.

எண்ணெய் -  தேவையான அளவு

 

Success! Message received.

  • Grey Facebook Icon
  • Grey Twitter Icon
  • Grey Google+ Icon
  • Grey YouTube Icon
  • Grey Pinterest Icon
  • Grey Instagram Icon
bottom of page